சினிமா

பார்த்திபன் - சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் - எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்

Published On 2019-02-08 10:48 GMT   |   Update On 2019-02-08 10:48 GMT
பார்த்திபன் - சீதாவின் மூத்த மகளான அபிநயாவுக்கும், எம்.ஆர்.ராதாவின் மகள் வழி கொள்ளு பேரனான நரேஷ் கார்த்திக்குக்கும் வருகிற மார்ச்சில் திருமணம் நடைபெற இருக்கிறது. #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik
நடிகர் பார்த்திபனும், நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என 2 மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளார்கள். பார்த்திபனும், சீதாவும் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கின்றனர்.

பார்த்திபன் - சீதா தம்பதியின் இரண்டாவது மகள் கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதுபற்றி சீதா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு என் இரண்டாவது மகள் கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு என் மூத்த மகள் அபிநயாவுக்கு தீவிரமாக வரன் தேடினோம். மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக் சென்னையில் தொழிலதிபராக இருக்கிறார். அவர் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். அதாவது நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன். மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தூரத்து சொந்தம்.



கடந்த ஜனவரி மாதம் சோழா ஓட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. அதில் 2 குடும்பங்களை சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைத்து இருந்தோம். அடுத்த மாதம் மார்ச் 24-ந் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்க இருக்கிறது. மகள் என்னை விட்டு தூரமாக போய்விடக் கூடாது என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன்.

இப்போது சென்னையிலேயே வரன் அமைந்ததில் எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோ‌ஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Parthiban #Seetha #Abhinaya #NareshKarthik

Tags:    

Similar News