சினிமா
ஜெய்யின் நீயா 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #Neeya2 #Jai
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா'. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டதால் `நீயா 2' என்று பெயர் வைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் எல்.சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறும்டியாக படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். மேலும் ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித்திருக்கிறார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மெண்ட் கைப்பற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். #Neeya2 #Jai