சினிமா

அஜித்தின் அடுத்தப் படம் பிப்ரவரியில் தொடக்கம்

Published On 2018-10-28 11:35 GMT   |   Update On 2018-10-28 11:35 GMT
விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

அஜித் இரு விதத் தோற்றங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது.

ஐதராபாத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து படக்குழு மும்பை சென்று பாடல் காட்சியை படமாக்கிவருகிறது. இதைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு நடத்தப்படஉள்ளது.

இதைத் தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அது பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனவும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News