சினிமா

மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க பல வருடங்கள் ஆச்சு - சமந்தா

Published On 2018-10-22 13:19 GMT   |   Update On 2018-10-22 13:19 GMT
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கு பல வருடங்கள் ஆச்சு என்று கூறியிருக்கிறார். #Samantha
யு டர்ன் மூலம் தனி கதாநாயகியாகவும் வெற்றி பெற்றுவிட்ட சமந்தா அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பட தேர்வு பற்றி கேட்டதற்கு ’நான் சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

கமர்ஷியல் படங்கள், கலைப் படங்கள்னு எல்லாவிதமான படங்களிலும் நடித்துவிட்டேன். இனி பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

நான் சினிமாவுக்கு வந்தவுடனேயே `யுடர்ன்’ மாதிரியான கதைகள்ல நடித்திருந்தால் யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது சமந்தா என்றால் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தனி ஆளா ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு.



இந்த நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்குறதுக்கே எனக்குப் பல வருடங்கள் ஆச்சு. எனக்கு இப்போதான் நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் உள்ள வேடங்கள் வருகின்றன. நடிக்க வந்ததுல இருந்து, கதைகளை நான்தான் முடிவு பண்றேன். இனியும் நான்தான் முடிவு பண்ணுவேன்’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News