சினிமா
பெற்றோருக்கு ஊர் சுற்றி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்
தமிழில், கார்த்தி, சூர்யா, படங்களில் பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காண்பித்திருக்கிறார். #RakulPreetSingh
தமிழ் கைகொடுக்காததால் தெலுங்குக்கு சென்று முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் திசிங்கை மீண்டும் தமிழ் கைகொடுத்து வரவேற்றுள்ளது.
ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தொடர்ந்து சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடித்து வருகிறார். ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்புக்காக உக்ரைன் சென்றிருந்தபோது, ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தன் பெற்றோரை அழைத்துச்சென்று ஊர் சுற்றிக் காட்டியிருக்கிறார் ரகுல்ப்ரீத் சிங்.
இதற்கு முன்னர், ஒரு தெலுங்கு படத்துக்காக அங்கு சென்றிருந்ததால், அத்தனை இடங்களும் ரகுலுக்கு நன்றாக தெரியுமாம். அதனால் இந்த முறை படப்பிடிப்புக்கு பெற்றோரையும் திட்டமிட்டே கூட்டி சென்று இருக்கிறார்.