புது அவதாரம் எடுத்த நித்யா மேனன்- பலரும் வாழ்த்து
- நித்யா மேனனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை நித்யா மேனன். 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'இட்லி கடை', 'தலைவன் தலைவி' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்த படம் குறித்த எந்த தகவலையும் நித்யா மேனன் அறிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை நித்யா மேனன் அதில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேயுரி புரொடக்ஷனை தொடங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
"எனக்கு, திரைப்படங்களை உருவாக்குவது என்பது வெறும் கதைகளைச் சொல்வதை விட எப்போதும் மேலானது. இது உண்மையான மக்களை இவ்வளவு ஆழமான மட்டத்தில் சென்றடைய முடிவது பற்றியது. அறிவை விட ஆழமானது,
சிந்தனை, பகுத்தறிவுக்கு மேலே ஒரு இடம் பெரியது.
ஒரு மாற்றத்தைத் தூண்டுவது - படைப்பு செயல்பாட்டில் நான் மூழ்கியிருக்கும் போது எனக்குள்ளும், கவனிக்கும் மற்றவருக்குள்ளும். அமைதியாக அலை அலையாக வரும் மாற்றங்களை உருவாக்குவது.
நான் நடிக்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அது எனது செயல்முறையாகவும் நோக்கமாகவும் இருந்து வருகிறது. நான் இப்போது படங்களைத் தயாரிக்கும் போதும் அதுவே என் நோக்கமாகவே இருக்கும். நான் உங்களுக்கு - Keyuri Productions-ஐ வழங்குகிறேன்," என்று தெரிவித்துள்ளார்
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நித்யா மேனனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.