சினிமா
சுட்டுப்பிடிக்க உத்தரவு படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். #SuttuPidikkaUtharavu
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களாக வலம் வருபவர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய படத்தை ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ளார்.
செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் பணியில் இருக்கும் போது திகிலான குற்றச் சம்பவம் ஒன்று நடக்கிறது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கிறார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை முக்கியமான பிரபலம் ஒருவர் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.