சினிமா
நடிகையர் திலகம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். #Rajamouli #KeerthySuresh
இயக்குனர் ராஜமவுலியின் படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் அவர் படத்தில் கதாநாயகியாகவே நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேசுக்கு கிடைத்து இருக்கிறது.
அண்மையில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் கீர்த்தி சுரேசின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் முதலில் பாராட்டியவர் இயக்குனர் ராஜமவுலி தான். அப்போதே ராஜமவுலி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல் வந்தது. அது உறுதியாகி இருக்கிறது. ராஜமவுலி அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரை வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.
இதில் இரண்டில் ஒரு ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக கீர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ராம் சரண், ஜூனியர் என். டி.ஆரில் யாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
படத்திற்கு தற்போது ஆர்ஆர்ஆர் என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கி, படம் 2020-ம் ஆண்டு ரிலீசாகும். #Rajamouli #KeerthySuresh