சினிமா

கொரில்லாவை விட்டு பிரிந்த ஜீவா

Published On 2018-05-31 16:33 GMT   |   Update On 2018-05-31 16:33 GMT
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்து வந்த ‘கொரில்லா’ படத்தின் தன்னுடைய காட்சிகளை அனைத்தையும் முடித்து விட்டு பிரிந்திருக்கிறார். #Gorilla #Jiiva
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது. பின்னர் தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ஜீவா தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் முடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்குகிறார் டான் சாண்டி. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். 



விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாக இருக்கிறது. தாய்லாந்தில் `காங்' சிம்பன்சி குரங்குடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News