சினிமா

சந்தோஷ் நாராயணன் பிறந்த நாளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பா.இரஞ்சித்

Published On 2018-05-15 10:57 GMT   |   Update On 2018-05-15 10:57 GMT
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #PaRanjith #PariyerumPerumal
பா.இரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’,  ஆகிய படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘காலா’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுதவிர, பா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் ‘கருப்பி...’ பாடலை வெளியிட்டார்கள். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்தது. தற்போது இரண்டாவது பாடலான ‘எங்கும் புகழ் துவங்க...’ என்ற பாடலை மே 18ம் தேதி வெளியிட இருக்கிறார்கள். இதனை பா.இரஞ்சித், சந்தோஷ் நாராயணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

இயக்குனர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌சன்ஸ் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை தயாரித்து வருகிறது. இயக்குனர் ராமின் இணை இயக்குனரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



இதில் கதிர் நாயகனாகவும், கயல் ஆனந்தி நாயகியாகவும், யோகிபாபு, லிஜீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Tags:    

Similar News