ஆட்டோ டிப்ஸ்

பயன்படுத்திய கார் விற்பனை துறையில் களமிறங்கிய டொயோட்டா

Published On 2022-07-11 07:43 GMT   |   Update On 2022-07-11 07:43 GMT
  • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் பயன்படுத்திய கார் மாடல்கள் விற்பனை துறையில் களமிறங்கியது.
  • முதற்கட்டமாக பெங்களூரு நகரில் பயன்படுத்திய கார் விற்பனை மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து ஆட்டோமொபைல் சந்தை மெல்ல மீண்டு வருகிறது. பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய கார் விற்பனை துறையில் கதவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்த வரிசையில், பயன்படுத்திய கார் விற்பனையில் இருந்து லாபம் ஈட்ட டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.


டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் கிர்லோஸ்கர் குழுமம் - டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கூட்டணி அமைந்து உள்ளன. இந்த கூட்டணியின் கீழ் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்ய டொயோட்டா நிறுவனம் முடிவு செய்து உள்ளது. முன்னதாக பயன்படுத்திய கார் விற்பனை பிரிவில் களமிறங்கு வதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த வரிசையில், தான் தற்போது பெங்களூரு நகரில் டொயோட்டா யூஸ்டு கார் அவுட்லெட்-ஐ (TUCO) டொயோட்டா நிறுவனம் துவங்கி இருக்கிறது. புதிய விற்பனையகத்தின் மூலம் நாடு முழுக்க டொயோட்டா வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் நம்பத்தகுந்த பயன்படுத்திய கார் சந்தையை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News