ஆட்டோ டிப்ஸ்

சோதனையில் சிக்கிய புதிய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர்

Published On 2022-06-06 11:32 GMT   |   Update On 2022-06-06 11:32 GMT
  • டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • புது மாடலுக்கான சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஸ்பை படங்களின் படி புதிய பார்ச்சூனர் மாடலின் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் மாடை போன்று காட்சியளிக்கிறது.


வெளிப்புற தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் இல்லாத நிலையில், இந்த மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் இண்டகிரேடெட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இத்துடன் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இங்கு புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் எம்.ஜி. குளோஸ்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Source: Rushlane

Tags:    

Similar News