நோ பார்கிங்கில் ஆக்கிரமிப்பு, போட்டோ அனுப்பினால் ரொக்கம் - மத்திய மந்திரி அசத்தல் அறிவிப்பு!
- இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
- இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.
தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.