ஆட்டோ டிப்ஸ்

துபாயில் பறக்கும் கார் சோதனை - அசத்திய சீன நிறுவனம்

Published On 2022-10-12 10:57 GMT   |   Update On 2022-10-12 10:57 GMT
  • சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் துபாயில் தனது முதல் பறக்கும் கார் சோதனையை நடத்தியது.
  • முதற்கட்ட சோதனையில் பறக்கும் கார் ஆளில்லாமல் 90 நிமிடங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பெங் இன்க் (Xpeng Inc) ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது முதல் பறக்கும் காரை வெளியிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் பறக்கும் காரை வெளியிட பெங் இன்க் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பெங் இன்க் உருவாக்கிய X2 பறக்கும் கார் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

இதில் உள்ள எட்டு ப்ரோபெல்லர்கள் வாகனத்தின் மூலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை முயற்சியாக துபாயில் இந்த பறக்கும் கார் 90 நிமிடங்கள் ஆளின்றி இயக்கப்பட்டது. அடுத்த தலைமுறை பறக்கும் கார்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடல் இது என பெங் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

"சர்வதேச சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். உலகில் புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முன்னோடியாக துபாய் விளங்குகிறது. இதன் காரணமாகவே பறக்கும் கார் சோதனையை இங்கு மேற்கொள்ள முடிவு செய்தோம்," என பெங் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மிங்குவான் கியூ தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News