வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானம் செல்ல போகிறார். கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
குடும்பச் செலவுகள் இந்த வாரம் அதிகரிக்கும். தீபாவளி பட்ஜெட் கூடும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில், வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகத்தில் சொத்து வாங்கலாம். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.
14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி முதல் 16.10.2025 பகல் 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு கூடும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. நவகிரக குரு பகவான் வழிபடுவதால் ஏற்றமான பலன்கள் நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406