ஆன்மிக களஞ்சியம்

விஷ்ணு பக்தன் பிரகலாதன்

Published On 2023-09-17 16:45 IST   |   Update On 2023-09-17 16:45:00 IST
  • பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.
  • இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

இரண்யகசிபு கேட்ட வரத்தை பிரம்மன் அளித்ததால் தேவர்களும், மனிதர்களும் மிகவும் அஞ்சினார்கள்.

இரண்யகசிபு தன்னுடைய நீண்ட கால தவத்தின் பயனாக தனக்கு வரம் கிட்டியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

தான் மரணத்திலிருந்து விடுதலை அடைந்ததாக பெருமகிழ்ச்சி அடைந்தான்.

பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.

அவன் தாய் (கயாதுவின்) வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமந் நாராயண மந்திரத்தை (நமோ நாராயண) நாரதமுனிவரின் வாயிலாகக் கேட்டு அறிந்து கொண்டான்.

இதனால் இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

அவன் பிறவியிலேயே பாகவதனாக இருந்ததால் அந்த நல்ல குணங்கள் அவன் வளர வளர மேன்மேலும் அவனுள் நன்கு ஊறியிருந்தன.

மெதுவாக அவன் விஷ்ணுபக்தன் என்பதை எல்லோரும் அறிந்தனர்.

அவனுடைய தந்தை இரண்யகசிபு தன்னுடைய எதிரியான விஷ்ணுவின் பக்தனாக தன் மகன் வளருவதைத் தெரிந்து கொண்டான்.

அதனால் அவன் மிகவும் மன உளைச்சலும், வருத்தமும் அடைந்தான்.

Tags:    

Similar News