ஆன்மிக களஞ்சியம்
- உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.
- இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.
நோயற்ற வாழ்வு தரும் சூரிய வழிபாடு
தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருஷத்தில், ஆறுமாதம் பகல், ஆறு மாதம் இரவு.
உத்தராயணம் என்னும் தைமாதம் முதல் ஆனி மாதம் முடிய ஆறுமாத காலம் தேவர்களுக்கு பகல்.
ஆகவே இந்த மாதங்களில் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் வீட்டில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்தவும் மிகச் சிறந்தகாலமாக கருதப்படுகிறது.
உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.
அனைத்து தெய்வங்களையும் சூர்ய மண்டலத்தின் நடுவில் தியானம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்ரம்.
இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.