ஆன்மிக களஞ்சியம்

நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

Published On 2023-09-03 14:58 IST   |   Update On 2023-09-03 14:58:00 IST
  • ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.
  • அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய முருகப் பெருமான்

சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தனது ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம் என்ற ஐந்து முகங்களோடு ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் அதோமுகத்தையும் கொண்டு திகழ்ந்தார்.

அப்போது ஒவ்வொரு திருமுகத்திலும் உள்ள நெற்றிக்கண்ணிலிருந்து ஜோதிப்பொறி தோன்றியது.

அதை பார்வதி தேவியாலும் தாங்க முடியாததால் வாயு பகவான் ஏந்திச் சென்று கங்கையில் விழச் செய்தார்.

கங்கையாலும் அதைத் தாங்க முடியாததால் அக்னி பவான் அதைத் தானே எடுத்து சரவணப் பொய்கையில் தாமரை மலர்களில் சேர்த்தார்.

அவை ஆறு குழந்தைகளாகத் தோன்றின.

பார்வதி தேவி பாசத்துடன் அக்குழந்தைகளை ஒன்றாக வாரிச் சேர்த்து அணைக்கவே ஆறுமுகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் முருகப் பெருமான் தோன்றினார்.

அவர் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டார்.

Tags:    

Similar News