ஆன்மிக களஞ்சியம்

நரசிம்மரை சாந்த படுத்திய பிரகலாதன்

Published On 2023-09-17 16:55 IST   |   Update On 2023-09-17 16:55:00 IST
  • எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.
  • பிரகலாதன் பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

இரண்யனை அழித்த பிறகு எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.

அதனால் அவர்கள் எல்லோரும் ஸ்ரீமகாலட்சுமியை சரண்டைந்தனர். ஆனாலும் அவளாலும் அவருடைய உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரம்மாவின் வேண்டுதலின்படி, பரம பாகவதனான பிரகலாதன் ஸ்ரீநரசிம்மனின் முன்பாகச் சென்று, பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

அதனால் மனம் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்ம சாமி சாந்தமானார்.

தன்னுடைய சுயரூபத்தை அடைந்து சாந்தமான பகவான் தானே சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டது இந்த விபவ அவதாரத்தின் தனித்தன்மையாகும்.

தன்னுடைய பக்தனான குழந்தை பிரகலாதனைக் காப்பாற்றவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் சுயம்புவாகத் தோன்றினார்.

Tags:    

Similar News