ஆன்மிக களஞ்சியம்

ஹயக்ரீவர் அவதரித்த ஆடி பவுர்ணமி

Published On 2023-11-03 12:14 GMT   |   Update On 2023-11-03 12:14 GMT
  • ஆடி மாதம் பௌர்ணமி அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.
  • ஹயக்ரீவரை வழிபட்டால், பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

ஆடி அமாவாசை

தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசையாகும்.

எனவே இந்த அமாவாசை மிக முக்கியம்.

சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் பெண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது.

பெண்கள் அன்று கடலில் புனித நீராடி பித்ரு வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களைப் பெற முடியும்.

ஆடி அமாவாசை தர்ப்பணத்தை ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்றில்லை.

பெண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

கல்வியில் ஜொலிப்பார்கள்

ஆடி பவுர்ணமி

ஆடி மாதம் பௌர்ணமி தினமும் விசேஷமானதுதான்.

அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பவுர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்

பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

Tags:    

Similar News