ஆன்மிக களஞ்சியம்

சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்!

Published On 2023-08-16 12:50 GMT   |   Update On 2023-08-16 12:50 GMT
  • மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
  • சிவனை “அபிஷேகப்பிரியன்” என்றும் சொல்வார்கள்.

சிவனுக்குரிய எட்டு முக்கிய விரதங்கள்

அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

அவையாவன:

1 சோமாவார விரதம் - திங்கள்,

2 உமாமகேஸ்வரர் விரதம் - கார்த்திகை பவுர்ணமி,

3 திருவாதிரை விரதம் - மார்கழி,

4 சிவராத்திரி விரதம் - மாசி,

5 கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்,

6 பாசுபத விரதம் - தைப்பூசம்,

7 அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி,

8 கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.

சிவராத்திரி-நைவேத்தியங்கள்

மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.

முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.

அதிசயிக்க வைக்கும் "அபிஷேகப்பிரியன்"

சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டார். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.

சிவனை "அபிஷேகப்பிரியன்" என்றும் சொல்வார்கள்.

அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும்.

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.

Tags:    

Similar News