ஆன்மிக களஞ்சியம்

அபிஷேக பலன்கள்

Published On 2023-07-30 05:29 GMT   |   Update On 2023-07-30 05:29 GMT
  • இளநீர் அபிஷேகம் மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.
  • ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.

மணக்குள விநாயகர் கோவிலில் எண்ணை, தயிர், பால், திரவப்பொடி, அரிசி மாவு, ம.ஞ்சள் பொடி, தேன், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தங்க நகைகள், விபூதி, கலசம், போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் வருமாறு:-

நல்லெண்ணை:-

இது சாமிக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உலக மக்களுக்கும் குளிர்ச்சி ஏற்படுகிறது.

மஞ்சள் தூள்:-

மங்களகரமான வாழ்க்கை தருகிறது.

அரிசி மாவு:-

நெற்பயிர்கள் அதிகமாக விளையவும் மக்கள் சுகமாக வாழவும் பயன்படுகிறது.

பஞ்சாமிர்தம்:-

இது உடல் நலம் தருகிறது.

தயிர்:-

மக்கள் சுகமாக வாழவும் பால பாக்கியம் கிடைக்கவும்செய்கிறது.

பழ வகைகள்

முக்கனி அபிஷேகம் சிறப்பினை தருகிறது.

இளநீர்:-

மக்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.

விபூதியும் சந்தனமும்:-

மக்களுக்கு அருள் தருகிறது.

கலசாபிஷேகம்:-

அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கிறது.

மணக்குள விநாயகருக்கு அருகம் புல் மாலை, துளசி, தாமரை பூ போன்றவைகளும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

திருவிழாக்கள்

மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டையட்டி விநாயகருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

மூலவருக்கு செய்யும் போது உற்சவ மூர்த்திக்கும் எண்ணை, பால் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்சவ மூர்த்தி மாலையில் வீதி உலா வருகிறார்.

ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அப்போது விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறுகின்றது.

தீபாவளி மற்றும் பொங்கல் நேரங்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சாமி வீதி உலா நடைபெறுகிறது.

Tags:    

Similar News