என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீட்டில் ஆஞ்சநேயர் வழிபாடு
    X

    வீட்டில் ஆஞ்சநேயர் வழிபாடு

    • ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து மகிழலாம்.
    • ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து,

    பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.

    வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம்,

    ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீ அனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம்,

    ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி,

    ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து

    அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.

    இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.

    Next Story
    ×