search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவனின் அம்சம்

    • அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
    • வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ்வனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    அனுமனின் பெயர்கள்

    பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் "பவமானர்" என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் "கபீஷர்" என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது.

    மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.

    அனுமன் தாடை நீண்டவர்

    அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.

    ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன்.

    அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது.

    எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

    Next Story
    ×