என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இரணியகசிபுவை வதம் செய்த நரசிம்மர்
    X

    இரணியகசிபுவை வதம் செய்த நரசிம்மர்

    • புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.
    • ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    இரணியகசிபுவினுடைய கொடும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அக்குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட இடத்திலேயே அவதரித்தார்.

    அசுரனின் முதல் விருப்பத்தின்படி மனிதானாகவோ, மிருகமாகவோ அல்லாமல் ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், சிறந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் தோன்றினார்.

    புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.

    கடவுள் சந்தியா காலத்தில் சூரியன் குறைந்த ஒளியுடன் திகழ்ந்த வேளையில் பாதி உயிரிழந்த நிலையிலும் இரண்யகசிபுவைத் தன் மடியில் (தன் தொடையின் மீது) அந்த மண்டபத்தின் வாயிற்படியில் முற்றத்திற்கு உள்ளேயுமில்லாமல், வெளியேயுமில்லாமல் இருத்தி அனுடைய வயிற்றை தன் கூர்மையான நகங்களினால் கிழித்துக் கொன்றார்.

    எம்பெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பதற்காக மிகவும் பயங்கரமான அவதாரம் எடுத்ததைப் பார்த்த பிரகலாதன், தன்னுடைய தந்தையைக் கொல்வதற்காக பகவான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டான்.

    இதுவே ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் சிறப்பும், அற்புதமும் ஆகும்.

    Next Story
    ×