search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் போட்டிக்கு பின்னர் அணி மாறிய பஞ்சாப், மும்பை வீரர்கள்
    X

    ஐபிஎல் போட்டிக்கு பின்னர் அணி மாறிய பஞ்சாப், மும்பை வீரர்கள்

    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் தங்களது ஜெர்சிக்களை மாற்றி அணிந்து கொண்டனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP

    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அவரால் பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. இந்த போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர்.

    அப்போது பஞ்சாப் அணியின் ராகுலும், மும்பை அணியின் ஹர்திக் பாண்டியாவும் சிறிது நேரம் உறையாடினர். அதைத்தொடர்ந்து இரு வீரர்களும் தங்களது ஜெர்சிக்களை மாற்றிக்கொண்டனர். ராகுல் மும்பை அணியின் ஜெர்சியையும், பாண்டியா பஞ்சாப் அணியின் ஜெர்சியையும் அணிந்து கொண்டனர்.



    பொதுவாக கால்பந்து போட்டிகளில் வீரர்கள் இதுபோன்று ஜெர்சிக்களை மாற்றிக்கொள்வது வழக்கம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் இரு வீரர்களும் இதுபோன்ற செயலில் ஈருபட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். #IPL2018 #KLRahul #HardikPandya #MIvKXIP 
    Next Story
    ×