என் மலர்
செய்திகள்

பிரச்சனை விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும்- ஹர்பஜன் சிங் நம்பிக்கை
பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீர்ந்து மீண்டும் சென்னையில் போட்டி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #CSK
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியானது கடும் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்திருந்தார். தற்போது சென்னையில் போட்டியில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளார்.
சென்னையில் விளையாட முடியாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் ‘‘சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்- நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்.

அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து, சென்னையில் மீண்டும் போட்டி நடைபெறும் என நம்புகிறேன். அன்பு வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய வாழ்த்துக்களும் ஆதரவுகளும் தேவை’’ என்று டுவிட் செய்துள்ளார்.#IPL
தமிழ் அமைப்புகள், சினிமா பிரபலங்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர். இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே தமிழக ரசிகர்களை கவரும் வகையில் தமிழில் டுவிட் செய்திருந்தார். தற்போது சென்னையில் போட்டியில்லை என்பதால் மிகுந்த வருத்தம் அடைந்ததுள்ளார்.
சென்னையில் விளையாட முடியாதது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் ‘‘சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்- நேசமும் துளியும் குறையாது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்.

அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீர்ந்து, சென்னையில் மீண்டும் போட்டி நடைபெறும் என நம்புகிறேன். அன்பு வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய வாழ்த்துக்களும் ஆதரவுகளும் தேவை’’ என்று டுவிட் செய்துள்ளார்.#IPL
Next Story






