search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - ஆர்சிபி அணியில் கோரி ஆண்டர்சன் சேர்ப்பு
    X

    ஐபிஎல் 2018 - ஆர்சிபி அணியில் கோரி ஆண்டர்சன் சேர்ப்பு

    ஐபிஎல் 2018 தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கவுல்டர்-நைலுக்குப் பதிலாக கோரி ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். #IPL2018 #RCB
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி நடைபெற்றது.

    இந்த ஏலத்தின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆஸிதிரேலியாவின் ஆல்ரவுண்டர் கவுல்டர்-நைல்-ஐ 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய இவர், 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். தற்போது இவர் காயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கவுல்டர்-நைல் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது. இவரது ஆரம்ப விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதற்கு ஐபிஎல் டெக்னிக்கல் கமிட்டி அனுமதி அளித்துள்ளார்.

    அதிரடி பேட்ஸ்மேன் கோரி ஆண்டர்சன் இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். #IPL2018 #RCB
    Next Story
    ×