என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்
Byமாலை மலர்13 Sep 2017 11:42 AM GMT (Updated: 13 Sep 2017 11:42 AM GMT)
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, பிரதமர் மோடியுடன் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை இன்று காரில் சென்று பார்வையிட்டார்.
அகமதாபாத்:
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மதியம் அகமதாபாத் வந்த ஷின்ஸோ அபே மற்றும் அவரது மனைவி அகி அபேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை
மார்க்கத்தில் காரில் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும், மந்திரிகளும் சென்றனர்.
ஆசிரமம் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களுக்கு இரு பிரதமர்களும் கையசைத்தபடி சென்றனர். மேலும், ஆங்காங்கே அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளித்தனர்.
சபர்மதி ஆசிரமம் சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியுடன் ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள சபர்மதி ஆற்றின் கரையில் அமர்ந்து பேசி மகிழந்தனர். அதன்பின்னர், அபேவும், மோடியும் ஆசிரமத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மதியம் அகமதாபாத் வந்த ஷின்ஸோ அபே மற்றும் அவரது மனைவி அகி அபேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேராக மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சாலை
மார்க்கத்தில் காரில் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும், மந்திரிகளும் சென்றனர்.
ஆசிரமம் செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களுக்கு இரு பிரதமர்களும் கையசைத்தபடி சென்றனர். மேலும், ஆங்காங்கே அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளித்தனர்.
சபர்மதி ஆசிரமம் சென்ற ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியுடன் ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த அவர், அங்குள்ள சபர்மதி ஆற்றின் கரையில் அமர்ந்து பேசி மகிழந்தனர். அதன்பின்னர், அபேவும், மோடியும் ஆசிரமத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
ஜப்பான் பிரதமரின் வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X