search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
    X

    இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். #TNByElections #OPS
    சென்னை:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் ஆளுங்கட்சியான அதிமுக இந்த 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



    தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அந்தந்த தொகுதிகளின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #TNByElections #OPS
    Next Story
    ×