search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை கடத்தல் பீதி- மனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது
    X

    குழந்தை கடத்தல் பீதி- மனநோயாளி கொலையில் மேலும் 2 பேர் கைது

    குழந்தை கடத்தல் பீதியில் மனநோயாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:     

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, பழவேற்காடு, பெரிய பாளையம், ஆரணி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதி நிலவுகிறது.

    இதனால் ஊருக்குள் வரும் அப்பாவி வெளியாட்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த 9-ந் தேதி பழவேற்காடு பகுதியில் குழந்தை கடத்தல் பீதியால் மனநோயாளி ஒருவர் பொது மக்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட் டார். பின்னர் அவரது உடல் பாலத்தில் தொங்க விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக பழவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், மணிகண்டன், கோதண்டன் உள்பட 15 பேரை கைது செய்தனர். அவர்களை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் மன நோயாளி கொலை தொடர்பாக கரிமணல் பகுதியை சேர்ந்த மோகன். செந்தில் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கொலையில் மேலும் சிலரை கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். மனநோயாளியை தாக்கும் வீடியோவை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பழவேற்காடு பகுதியில் தொடர்ந்து பரபரப்பான நிலை நீடித்து வருகிறது.#tamilnews
    Next Story
    ×