search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடற்பயிற்சி"

    • நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
    • இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள்.

    உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் ஆயுள் ரகசியம் குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் டான் ப்யூட்னர் ஆய்வு செய்தார். ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு, கிரீஸில் உள்ள இகாரியா தீவு, கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா நகரம், கோஸ்டாரிகாவில் உள்ள நிக்கோயன் தீபகற்பம், இத்தாலியில் உள்ள சர்டினியா நகரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் மருத்துவர்கள், மானுடவியலாளர்கள், தொற்றுநோயியல் நிபுணர்கள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இறுதியில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு அவர்கள் பின்பற்றும் பொதுவான விஷயங்கள் கண்டறியப்பட்டது.

    நீண்ட காலம் வாழ்பவர்கள் இயற்கையுடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயற்கையோடு இணைந்திருக்கும். இயற்கையான சூழலில் வசிப்பவதற்கு விரும்புவார்கள். அங்குதான் வசிக்கவும் செய்வார்கள்.

    100 வயதுக்கு மேல் வாழும் மனிதர்களைக் கொண்ட நாடுகளில் அவர்கள் என்ன ரகசியங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

    தாவர உணவுகள்

    உலகில் நீண்டகால வாழ்வதற்கு அவர்கள் தாவரங்கள் சார்ந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகின்றனர். பீன்ஸ், கீரைகள், காய்கறிகள், கிழங்குகள், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நட்ஸ் வகைகள், பழங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் அவர்களது ஆயுள் நீடிப்பதாக கருதுகிறார்கள்.

    ஆட்டுப்பால்

    இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மாட்டுப்பால் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக செம்மறி ஆட்டுப்பால் குடிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    மீன்

    இங்குள்ள மக்கள் தினசரி உணவுகளில் மீன் உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது மீன் உணவுகளை உண்கின்றனர்.

    பால் பொருட்களை தவிர்த்தல்

    மேலும் அவர்கள் பாலை குடிப்பதில்லை. குறிப்பாக பால் மற்றும் பால் பொருட்களான சீஸ், கிரீம், வெண்ணை, வெண்ணை சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் சேர்த்துக்கொள்வதில்லை. தவிர்த்துவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீன்ஸ்

    தினமும் குறைந்தது அரை கப் அளவிற்காவது வேகவைத்த பீன்ஸை எடுத்துக்கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் ஒரு மணிதன் தினமும் 20 கிராம் பீன்சையாவது எடுத்துக்கொள்வது, அவர்களை இறக்கும் அபாயங்களில் இருந்து 8 சதவீதம் குறைக்கிறது என்று தெரிவித்துள்ளது.

    100 வயதை கடந்தவர்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுகளும் 90 சதவீதம் வரை அவர்களின் வீட்டுக்கு 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வளரும். இதனால் உணவு சமைப்பது எளிது. கிழங்குகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றனர். தானியங்களை அரைத்து பின்னர் சமைத்து சாப்பிடுகின்றனர்.

    2002 முதல் அமெரிக்கர்கள் நீண்டகாலம் வாழ்ந்தவர்கள் இறைச்சி உணவுகளை தவிர்த்து சைவ உணவை மட்டுமே சாப்பிட்டவர்கள் என்று கணித்துள்ளது. 

    • யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
    • சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது.

    யோகா செய்வது ஒருவரின் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் தோரணையை மேம்படுத்துதல், அத்துடன் மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்களைத் தருகிறது.

    உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்து மற்றும் உணவு ஆகியவை உடற்தகுதியின் முக்கிய கூறுகளாகும். இதன் விளைவாக, யோகாவை வெறும் வயிற்றில் செய்யலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

    அந்த வகையில் உங்கள் காலை உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் ஏதாவது சாப்பிடுவது அவசியம். அதே சமயம், உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய, அந்த உணவானது இலகுவாகவும் அதிக கனமாகவும் இருக்கக்கூடாது. நாம் நம் நாளைத் தொடங்குவதற்கு முன், நம் உடலுக்கு தேவையான எரிபொருளை கொடுக்க வேண்டும்.

    உங்கள் வளர்சிதை மாற்றத்தை மறுதொடக்கம் செய்ய ஒரு பேரிச்சம் பழம் அல்லது பழங்கள் போதுமானதாக இருக்கும். மறுபுறம், உள்ளிருந்து நீங்கள் கட்டுப்படுத்தும் சுவாசத்தை சீர்குலைக்காமல் இருக்க, யோகாவை காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

    உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். சிறந்த தூக்கத்தையும் யோகா ஊக்குவிக்கிறது. யோகா செய்வதால் தன்னம்பிகை மற்றும் சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும். மேலும் யோகா செய்வதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். யோகா செய்வதால் நியாபக சக்தியையும், நீண்ட ஆயுளையும் அதிகரிக்க முடியும். 

    • மனமும், உடலும் அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம்.
    • மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம்.

    எந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற ஒரு நல்ல விஷயம் உண்டு என்றால் அது யோகாசனம் தான். கிட்டத்தட்ட 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் தோன்றியது தியான முறை யோகக் கலை.

    யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது. அனுதினமும் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தாலே வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும்.

    தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகா.

    தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும். எனவே ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியமும் கூடும்.

    நரம்பு, ரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.

    உடற்பயிற்சி

    தினமும் 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்தால், உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீச்சல், சைக்கிளிங், ஜூம்பா, கார்டியோஸ், யோகா போன்றவற்றில் உங்களுக்கு பிடித்ததை செய்யலாம்.

    தூக்கம்

    தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் மிக மிக அவசியம். சரியாக தூங்கவில்லையென்றால், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. அன்றாட வாழ்வில் தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்துக்கொள்வதை உறுதி செய்யுங்கள்.

     டயட் உணவு:

    கார்போஹைட்ரேட்ஸ், புரதம், வைட்டமின், மினரல்ஸ் என அனைத்து வகையான சத்துக்களை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

    சமூகத்துடன் இணைந்து இருங்கள்:

    எப்போதும் தனியாக இருக்காமல், குடும்பம், நண்பர்கள், பக்கத்து வீட்டினர் என அனைவருடன் நல்லுறவை பாராட்டுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். இப்படி செய்தால் மனதிற்கு ஒருவிதமான நிம்மதி கிடைக்கும்.

    எந்தவொரு வேலை செய்தாலும், முழுமனதுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். ஏதோ நினைத்துக்கொண்டு எதையோ செய்யக்கூடாது.

    கவுன்ஸ்லிங்:

    உங்களால் தாங்க முடியாத பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் அல்லது மனநல நிபுணரின் உதவியை பெற்றுக்கொண்டு தீர்வு காணலாம்.

    • உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு உதவும்.
    • கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்கள் ஸ்கிப்பிங் செய்யலாம்.

    உடல் எடையை குறைப்பதற்கு பலரும் கடுமையான பயிற்சி முறைகளை கையாளுகிறார்கள். ஆனால் அத்தகைய பயிற்சிமுறைகளை எல்லோரும் கடைப்பிடிப்பது சாத்தியமில்லாதது.

    உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், உடற்பயிற்சிகளை சரியாக மேற்கொள்ள முடியாதவர்கள் எளிமையான பயிற்சி முறைகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஏற்றவையாக `ஜம்பிங் பயிற்சிகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் என்னென்ன பயிற்சிகள் எடை குறைப்புக்கு சிறந்த பலனை தரும் என்று பார்ப்போம். அதே போல உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற பயிற்சிகள் எவை என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

    ஸ்கிப்பிங்:

    உடல் பருமனை குறைப்பதற்கு எளிமையான பயிற்சியை தேடுபவர்களுக்கு `ஸ்கிப்பிங்' பயிற்சிதான் பொருத்தமானதாக இருக்கும். இதனை பயிற்சியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினருடன் விளையாட்டாகவும் மேற்கொள்ளலாம். அவர்களுக்கும் ஸ்கிப்பிங் கயிற்றை கொடுத்து துள்ளி குதிக்கச் செய்து உற்சாகமாக பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி உதவும். இதனை தவறாமல் செய்து வந்தால் உடல் எடை அதிகரிப்பது தவிர்க்கப்படும். கட்டுடல் அழகை பேண ஆசைப்படுபவர்களுக்கு இந்த பயிற்சி உதவும். உடல் பருமனால் ஏற்படும் புற்றுநோய், நீரிழிவு நோய் போன்றவற்றை நெருங்க விடாமல் தடுத்துவிடலாம்.

    ஜம்பிங் ஜாக்ஸ்:

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது நல்ல பலனை தரும். இந்த பயிற்சியும் எளிமையானதுதான். முதலில் கால்களை நேராக வைத்தபடி நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும். அதே வேகத்திற்கு கைகளையும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக கால்களை நன்றாக விரித்தபடி உற்சாகமாக துள்ளிக்குதிக்க தொடங்க வேண்டும்.

    சில நிமிடங்கள் கழித்ததும் குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். அப்படி துள்ளிக் குதிக்கும்போது கால் தரைக்கு வரும் சமயத்தில் மட்டும் வேகத்தை குறைக்க வேண்டும். அது கால்களுக்கு அழுத்தம் ஏற்படாமல் தடுக்க உதவும். இந்த பயிற்சி செய்யும்போது பொருத்தமான காலணிகள் அணிவதும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி செய்வது நல்லது. பின்பு சுயமாகவே பயிற்சியை தொடரலாம்.

    பர்பீஸ் பயிற்சி:

    இதுவும் கூட எளிமையான பயிற்சி முறைதான். சமதள தரையில் நேர் நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கைகளை தரையில் ஊன்றியபடி இடுப்பு பகுதி வரை உடலை நிமிர்த்த வேண்டும். பின்பு கைகளை நன்றாக அழுத்தி கால்களுக்கும் அழுத்தம் கொடுத்து குதித்த வாக்கில் எழுந்து நிற்க வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 50 முறை செய்து வரலாம். அதன் மூலம் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் எடையும் குறைய தொடங்கிவிடும்.

    முழங்கால் பயிற்சி:

    `ஹை க்னீ' என்று அழைக்கப்படும் இந்த முழங்கால் பயிற்சியையும் எளிமையாகவே செய்து விடலாம். நேர் நிலையில் நின்றபடி இரு கைகளையும் இடுப்பு பகுதியை ஒட்டி வைத்தபடி நேராக நீட்ட வேண்டும். பின்பு துள்ளிக்குதிக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தொடைப்பகுதி மேல் நோக்கி வந்து கைகளை தொட்டுவிட்டு செல்லுமாறு பயிற்சி முறை அமைய வேண்டும்.

    கைகளை மேலும், கீழும் அசைக்காமல் நேர் நிலையில் வைத்தபடியே தொடைப்பகுதியை தொட்டுச் செல்வதுதான் சரியான பயிற்சி முறை. அதனை கவனமாக மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தொடைப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தியும் பயிற்சியை மேற்கொள்ளலாம். தினமும் குறைந்தபட்சம் கால் மணி நேரமாவது பயிற்சி செய்து வருவது உடல் எடையை குறைப்பதற்கு உதவும்.

    • கலோரிகள் தான் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.
    • மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது.

    கலோரி... கலோரி... என்று சொல்கிறார்களே அது என்ன தெரியுமா? சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதான் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்த சக்திதான் கலோரியில் கணக்கிடப்படுகிறது.

    வயது, பாலினம், எடை, உயரம், உடல் உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் கலோரி அளவு மாறுபடும். ஒவ்வொரு உணவு வகைக்கும் கலோரி அளவு உண்டு. உதாரணத்துக்கு 100 கிராம் எடைகொண்ட ஆப்பிளில் 59 கலோரி இருக்கும். வாழைப்பழத்தில் 116 கலோரி, 300 கிராம் சாதத்தில் 346 கலோரிகள் கிடைக்கின்றன.

    மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும்.

    ஆண்களுக்கு

    26-45 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 2,600 கலோரிகள் தேவைப்படுகிறது. சுறுசுறுப்பான ஆண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,800 முதல் 3,000 கலோரிகள் தேவை.

    பெண்களுக்கு

    26-50 வயதுக்கு இடைப்பட்ட மிதமான சுறுசுறுப்பான பெண்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,000 கலோரிகள் தேவைப்படுகின்றன.

    சுறுசுறுப்பான பெண்களுக்கு (ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் நடப்பவர்கள்) ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் தேவைப்படும்.

    20 வயதின் முற்பகுதியில் உள்ள பெண்களுக்கு தங்கள் எடையைக் கட்டுப்படுத்த அதிக கலோரிகள் தேவை, ஒரு நாளைக்கு சுமார் 2,200 கலோரிகள் அல்லது அதற்கும் அதிகமாக தேவைப்படலாம்.

    50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,800 கலோரிகளுக்கும் குறைவாகவே தேவைப்படுகிறது.

    அதிக உடலுழைப்பைச் செலுத்தும், 55 கிலோ எடை கொண்ட ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2,210 கலோரிகள் தேவைப்படும் அதேநேரம் மிதமான உடலுழைப்பைச் செலுத்தும் பெண்களுக்கு 2,130 கலோரிகள் தேவைப்படும்.

    உடல் உழைப்பு குறைவாக இருக்கும் பெண்களுக்கு 1,660 கலோரிகள் தேவைப்படும். இதுவே அந்த பெண் கருத்தரித்தால் 300-500 கலோரிகள் கூடுதலாகத் தேவைப்படும். பாலுாட்டும் பெண் என்றால் கூடுதலாக 500 - 600 கலோரிகள் தேவைப்படும்.

    • தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது.
    • ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், நடுத்தர வயது பெண்கள் அழகாக இருக்க பல மேக்கப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

    மேக்கப் பொருட்கள் தினமும் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் சில நேரங்களில் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேக்கப் இல்லாமல் அழகான தோற்றத்தை பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

    * ஆரோக்கியமான சருமத்தை அடைய தினசரி உணவில் சத்தான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    * தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நல்லது. அதிக தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.

    * அன்றாடம் ஆரோக்கியமான உணவை சேர்த்துக்கொள்வதுடன் இரவு தூக்கமும் சரும அழகிற்கு உதவுகிறது. தினமும் 6 முதல் 8 மணிநேர உறங்குவதால் காலையில் புத்துணர்ச்சி ஏற்படும்.

    * சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. உடற்பயிற்சி சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க, ஒவ்வொரு நாளும் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறையை பின்பற்ற வேண்டும். ரசாயனங்கள் இல்லாத தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உறங்கும் முன் தோலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். 

    * சன்ஸ்கிரீனை கோடையில் மட்டும் பயன்படுத்த வேண்டியதில்லை. வருடத்தின் அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை தடுக்கிறது.

    * மன அழுத்தமே முடி உதிர்தல், முடி நரைத்தல், முகப்பரு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் தியானம், இசையை கேட்பது, பிடித்தமான செயல்களில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    • தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் கிடைக்கும்.
    • மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும்.

    நமது அன்றாட வேலைகளில் உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைப்பதே மிக அரிதாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் எப்போது உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது என்ற கேள்வி பலருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்பது ஒவ்வொரு நபருக்கு உள்ள நேர வாய்ப்புகள் மற்றும் அவர்கள் வேலைகளை பொறுத்து மாறுபடுகிறது.

    சிலர் காலை நேர பயிற்சி சிறந்தது என்றும், ஒரு சிலர் மாலை நேர பயிற்சியே சிறப்பு வாய்ந்தது என்றும் தெரிவிக்கின்றனர். இதில் மாலை நேர உடற்பயிற்சி மூலமாக கூடுதல் பலன் கிடைக்கிறது. மாலை நேர உடற்பயிற்சி பலன்களை இங்கு காணலாம். 

    * மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும். மாலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.

    * அலுவலகப் பணியாளர்களாக இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சோர்வு நீங்குகிறது. மேலும் இரவில் தடையற்ற நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

    * தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் உடற்பயிற்சி செய்ய நீண்ட நேரம் கிடைக்கும்.

    * காலை நேர உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மாலையில் இன்னும் சிறப்பாக உடற்பயிற்சி செயல்பட முடியும். மாலையில் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மன நெருக்கடி ஏற்படாமல் பயிற்சிகளை செய்ய முடியும்.

    * மாலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி பலன் கொடுக்கும்.

    • கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது.
    • சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    டீன் ஏஜ் வயதினர் அனைவருக்குமே, ஒரு ஆசை, ஒரு கனவு, ஒரு லட்சியம் இருக்கிறது. அது என்ன தெரியுமா..? சிக்ஸ் பேக் வைப்பது.

    இது சிலருக்கு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல், இயற்கையாகவே அமைந்துவிடும். ஆனால் பலருக்கு, அது வெறும் கனவாகவே இருக்கும்.

    சிக்ஸ் பேக் ஆசையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால்மட்டும் போதாது. சிக்ஸ் பேக் வைக்க, பிரத்யேக உணவு பழக்கமும் அவசியம். அந்த உணவு பழக்கத்தை தெரிந்து கொள்வோமா..?


    * கார்போஹைட்ரேட் அளவு

    பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது, அதற்காக கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கவும் கூடாது. ஏனெனில், உங்களின் தசைகள் தொடர்ந்து சீராக இயங்க அவற்றிற்கு தொடர்ச்சியான ஆற்றல் தேவை. அவை கார்போஹைட்ரேட்டிலிருந்து கிடைக்கிறது.

    * அதிக புரோட்டின்

    உங்கள் தசைகளை வலிமையாக்குவதில் மற்ற ஊட்டச்சத்துக்களை விட புரோட்டின்கள்தான் அதிக பலனளிக்க கூடியவை. உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் புரோட்டினின் பங்கு மிகவும் முக்கியமானது.

    * ஆரோக்கியமான கொழுப்புகள்

    உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு வலுசேர்க்கும் நிறைவுறா கொழுப்புகள் அவகேடா, ஆலிவ் எண்ணெய், மீன் போன்ற பொருட்களில் உள்ளது. இந்த பொருட்களில் இருந்து கிடைக்கும் கொழுப்புகள் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கும். வயிறை தட்டையாக வைத்திருக்க வேண்டும். சிக்ஸ் பேக் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் நிச்சயம் இந்த கொழுப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    * அடிக்கடி சாப்பிட வேண்டும்

    பெரும்பாலும் அனைவரும் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உணவு முறையை பின்பற்றுவது எடை குறைப்பிற்கும், சிக்ஸ் பேக் வைக்கவும் எந்த வகையிலும் உதவாது. கெட்ட கொழுப்புகள் மற்றும் இனிப்பு தவிர்த்து ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களின் ஈரல் மற்றும் தசைகளை வலிமையாக்க உதவும்.


    * உடலுக்கான எரிபொருள்

    உடற்பயிற்சிக்கு முன்பும், பின்பும் நீர்ச்சத்துக்களை உடலில் சேர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய தொடங்குவதற்கு முன் பெர்ரி, தயிர் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு அதிக உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றலை வழங்கும். அதேபோல உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு சிக்கன், காய்கறிகள், சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடுங்கள்.

    * சாப்பிடும் பழக்கம்

    உங்கள் நாளை எப்பொழுதும் சிறந்த உணவுகளான தொடங்குங்கள். நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையில்லாமல் பசி ஏற்படுவதை தடுக்கும். நாளின் கடைசி உணவானது நிச்சயமாக கார்போஹைட்ரேட் இல்லாமல் புரோட்டின் அதிகம் உள்ள உணவாக இருக்க வேண்டும்.

    • ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை.
    • உடலை ஸ்லிம்மாக இருக்க வைக்கும் உணவுகள்.

    ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்துக் கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையையோ சேர்க்காது என்பதை தெரிந்து கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும். ஸ்லிம்மாக இருக்க வைக்கும் சில உணவுகள் இதோ...

     பாதாம்

    பாதாமில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான கொழுப்பைத் தரும். தேவையில்லாத கொழுப்பை உடலில் சேர விடாது. புரதம், வைட்டமின்-இ, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம். இரவில் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடுவது நல்லது. ஒருநாளைக்கு ஐந்து பாதாம்களுக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

     பசி உணர்வை போக்கும் `ஆப்பிள்'

    ஆப்பிளில் உள்ள பெப்டின், மெதுவாக செரிமானமாக உதவும். வயிறு நிறைந்த உணர்வைத் தரும். வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பசியின்மை பிரச்சினையை போக்கும். வாரத்தில் மூன்று நாட்கள், ஆப்பிளை சாப்பிடலாம்.

     ஆற்றல் தரும் 'ப்ரோக்கோலி'

    புற்றுநோயை எதிர்க்கக் கூடியது, ஆரம்ப கட்டத்தில் உள்ள மார்பகப் புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது. நூறு கிராம் ப்ரோக்கோலியில், 30 கலோரிகள் கிடைக்கும். இதனுடன் கால்சியம், நார்ச்சத்து கிடைப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

     கலோரிகளை குறைக்கும் `கேரட்'

    நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசித்த நேரத்தில் சாப்பிட பசியும் போகும். தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்துவிடும். கலோரிகளை எரிக்கும் துரித உணவாக இருக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டீன் பார்வை திறனை கூர்மையாக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

     எடையை பராமரிக்கும் `அத்தி'

    புதிதாக பறித்த அத்தியில் அதிகளவு நார்ச்சத்து இருக்கும். செரிக்கும் போது ரத்தத்தில் மெதுவாக சர்க்கரையின் அளவு சேரும். இதனால் உடல் எடையும் அதிகரிக்காது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதால் அத்திப்பழம் அல்லது ஜூசாக அடிக்கடி பருகலாம்.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    • தொப்பையை குறைக்க மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான்.
    • சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறையும்.

    உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின்னர் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

    * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

    * எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

    * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, லவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

    * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

    * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

    * தொடர்ந்து 3 அல்லது 4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

    * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

    இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானை போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

    • இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும்.
    • மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு உதவும்.

    நீச்சல் பழகுவதை பலரும் போட்டிக்குரிய பயிற்சியாகத்தான் பார்க்கிறார்கள். கோடை காலங்களில் உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நீச்சல் குளத்தை நாடும் வழக்கத்தையும் பலர் பின்பற்றுகிறார்கள். உடற்பயிற்சியை போலவே இதனையும் பின் தொடரலாம். தினமும் நீச்சல் பயிற்சி செய்வதால் ஏராளமான நன்மைகளையும் பெறலாம்.

    * இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும் பயனுள்ள பயிற்சியாக நீச்சல் அமையும். சுவாச செயல்பாட்டையும் துரிதப்படுத்துவதன் மூலம் இதய துடிப்பையும் மேம்படுத்த உதவும். இதய தசைகளையும் பலப்படுத்தும்.

    * ஓடுவது, பளு தூக்குவது போன்ற பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது மூட்டுகளில் குறைவான அழுத்தத்தையே ஏற்படுத்தும். காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும். மூட்டுவலி, கீழ்வாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு நீச்சல் சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

    * தசை வலிமையை மேம்படுத்தும். கைகள், கால்கள், முதுகு மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்தவும் வித்திடும். நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.

    * நீச்சல் என்பது கலோரிகளை எரிக்கும் பயனுள்ள பயிற்சியாகவும் அமைந்திருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு உதவும். கலோரிகளை எரித்து தசைகளை வலுப்படுத்தவும் செய்யும். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தால் உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் வழிவகுக்கும்.

    * நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்யும். நீச்சலின்போது பின்பற்றும் சுவாச முறைகள் சுவாச தசைகளை வலுப்படுத்தவும், ஆக்சிஜன் நுகர்வை மேம்படுத்தவும் உதவும். ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு பிரச்சினை கொண்டவர்களுக்கு நீச்சல் பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

    * நீச்சல் பயிற்சி எண்டோர்பின்களை வெளியிடும். இது மகிழ்ச்சி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. கவலை, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

    ×