search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்திய தொழிலாளி கைது
    X

    மோட்டார் சைக்கிளை திருடி நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்திய தொழிலாளி கைது

    • காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா. இவரது மனைவி வகிதா கடந்த வாரம் 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வகிதாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்காசி போலீசில் வகிதா புகார் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் வகிதாவின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் தென்காசி படிக்கட்டு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தொழிலாளி பாரூக்நியாஸ் (வயது 50) என்பது தெரிவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நேரில் சென்று வீட்டில் பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டையே மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த தென்காசி போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். தென்காசி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×