என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
பி.எஸ்.என்.எல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி!
Byமாலை மலர்26 March 2022 6:04 AM GMT (Updated: 26 March 2022 6:04 AM GMT)
தற்போது செல்போன் பயன்படுத்தும் 10.15 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல் சேவை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என தகவல் தொடர்பு மந்திரி தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச எம்.பி குன்வார் ரேவதி ராமன் சிங், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது இந்தியாவில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினார். இதற்கு தேவுசின் சவுகான் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என பதிலளித்துள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் போட்டியிட்டு வரும் பி.எஸ்.என்.எல் இழப்பை சந்தித்து வருகிறது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவற்றை இணைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.15 சதவீதம் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் வைத்துள்ளது.
இன்னும் வாடிக்கையாளர்களை விரிவு செய்யும் வகையில் 4ஜி சேவை கொண்டுவரப்படவுள்ளது.
மேலும் இந்த ஆண்டு இறுத்திக்குள் 5ஜி சேவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் மந்திரி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X