என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அடுத்த வாரம் இந்தியா வரும் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்2 July 2021 4:19 AM GMT (Updated: 2 July 2021 2:53 PM GMT)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் ஜூலை 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, இன்பினிட்டி யு நாட்ச் கொண்டிருக்கிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, கூடுதலாக மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. தோற்றத்தில் புது ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ22 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், கேலக்ஸி எப்22 மாடல் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.
டீசர்களின் படி புது ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X