என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
கொரோனா பாதிப்பு காரணமாக ரியல்மி எடுத்த அதிரடி முடிவு
Byமாலை மலர்29 April 2021 9:49 AM GMT (Updated: 29 April 2021 9:49 AM GMT)
ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.
ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சியோமி, விவோ, ஐகூ போன்ற பிராண்டுகள் இந்த பிரிவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒத்திவைக்க ரியல்மி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரியல்மி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இதோடு மே 4 ஆம் தேத நடைபெற இருந்த ரியல்மி ஆண்டுவிழா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனாவைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் குடும்பமாக இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி வெளியீடு பற்றி ரியல்மி வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X