என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
5ஜி வசதியுடன் புது ஐபேட் ப்ரோ அறிமுகம்
Byமாலை மலர்20 April 2021 6:18 PM GMT (Updated: 20 April 2021 6:18 PM GMT)
ஆப்பிள் நிறுவனம் புது ஐபேட் ப்ரோ மாடலை அல்ட்ரா வைடு கேமரா, எம்1 பிராசஸருடன் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபேட் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ எம்1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மினி OLED கொண்டிருக்கின்றன.
11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புது ஐபேட் ப்ரோ தண்டர்போல்ட், மல்டி டச், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆப்பிள் பென்சில் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 16 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி வரையிலான இன்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் லிடார் சென்சார், வைபை 6, பேஸ் ஐடி, நான்கு ஸ்பீக்கர் ஆடியோ வசதி, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 11 இன்ச் ஐபேட் ப்ரோ விலை 799 டாலர்கள் என்றும் 12.9 இன்ச் மாடல் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X