என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்17 April 2021 4:13 AM GMT (Updated: 17 April 2021 4:13 AM GMT)
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் இது ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என சாம்சங் அறிவித்து இருந்தது.
தற்போதைய தகவல்களின்படி கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், இன்பினிட்டி யு ஸ்கிரீன், நாக்ஸ் செக்யூரிட்டி, குவிக் ஸ்விட்ச், சாம்சங் பே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஏ42 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X