என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இந்தியாவில் மீண்டும் வெளியாகும் பப்ஜி மொபைல்
Byமாலை மலர்13 Nov 2020 4:20 AM GMT (Updated: 13 Nov 2020 4:20 AM GMT)
இந்திய சந்தையில் மீண்டும் பப்ஜி மொபைல் கேம் வெளியாக இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் மீண்டும் வெளியாக இருக்கிறது. முன்னதாக பப்ஜி மொபைல் கேமிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் கேமினை இந்திய எல்லைக்குள் முழுமையாக முடக்கியது. பின் இந்த கேம் மீண்டும் வெளியாக இருப்பதாக பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்சமயம் பப்ஜி கார்ப்பரேஷன் பப்ஜி மொபைல் இந்தியா கேமினை இந்திய சந்தையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த கேம் இந்தியர்களுக்காக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கும் என பப்ஜி கார்ப்பரேஷன் அறிவித்து உள்ளது.
இம்முறை பப்ஜி விளையாடும் இளம் கேமர்கள் பரிந்துரைக்கப்பட்ட கேம்பிளே வழக்கங்களில் ஈடுபட கட்டுப்பாடுகள் இருக்கும். மேலும் கேம் விர்ச்சுவல் சிமுலேஷன் டிரெய்னிங் கிரவுண்டில் துவங்கி கேம் கதாபாத்திரங்கள் ஆடை அணிந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டு இருக்கும்.
இதுதவிர பப்ஜி கார்ப்பரேஷன் தாய் நிறுவனமான கிராப்டன் இன்க் இந்தியாவில் உள்ளூர் வீடியோ கேம், பொழுதுபோக்கு, இ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X