என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்த பிஎஸ்என்எல்
Byமாலை மலர்24 Oct 2020 6:41 AM GMT (Updated: 24 Oct 2020 6:41 AM GMT)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகைகளில் திடீர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் பிரீபெயிட் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இத்துடன் ஏற்கனவே அறிவித்த சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில், பிஎஸ்என்எல் ரூ. 135 சலுகையை மாற்றி இருக்கிறது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பிஎஸ்என்எல் ரூ. 135 விலை சலுகையின் வேலிடிட்டி நான்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாய்ஸ் கால் அளவு முந்தைய 300 நிமிடங்களில் இருந்து தற்சமயம் 1440 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும் எம்டிஎன்எல் நெட்வொர்க்கில் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகிறது. தற்போதைய தகவல்களின் படி வேலிடிட்டி நீட்டிப்பு தற்சமயம் தமிழ் நாடு வட்டாரத்திற்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 147, ரூ. 247, ரூ. 699 மற்றும் ரூ. 1999 விலை சலுகைகளின் வேலிடிட்டியும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X