என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது - ஒன்பிளஸ் அதிகாரி தகவல்
Byமாலை மலர்30 Sep 2020 7:29 AM GMT (Updated: 30 Sep 2020 7:29 AM GMT)
அந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகாது என ஒன்பிளஸ் அதிகாரி தெரிவித்து இருக்கிறது.
ஒன்பிளஸ் 8டி ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகாது என அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒன்பிளஸ் 8டி ப்ரோ மாடலை வெளியிடும் திட்டமில்லை என அவர் அறிவித்து இருக்கிறார்.
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஏற்கனவே பிரீமியம் பிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு மற்றொரு ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என பீட் லௌ தெரிவித்து இருக்கிறார். எனினும், ஒன்பிளஸ் 8டி மாடலுடன் ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை அவர் சூசகமாக தெரிவித்து உள்ளார்.
முன்னதாக ஒன்பிளஸ் நார்டு சீரிசில் புது மாடல் அறிமுகமாக இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. தற்சமயம் ப்ரோ சீரிஸ் அப்கிரேடு செய்யும் திட்டம் இல்லாததால், புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 8டி மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8டி மாடல் துவக்க விலை 799 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 69 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X