என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அடுத்த வாரம் அறிமுகமாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்
Byமாலை மலர்16 Sep 2020 7:53 AM GMT (Updated: 16 Sep 2020 7:53 AM GMT)
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் செப்டம்பர் 22 ஆம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுக நிகழ்வு ஆன்லைனில் நடைபெற இருப்பதாக ஹெச்எம்டி குளோபல் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வில் நோக்கியா 8.3 5ஜி மாடலின் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்துடன் புதிய நோக்கியா 7.3 ஸ்மார்ட்போன் 'நோ டைம் டு டை' ஹாலிவுட் திரைப்படத்தில் காணப்பட்டது. இந்த மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. நோக்கியா 7.3 பற்றிய விவரங்கள் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
இவைதவிர நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு துவங்குகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X