என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் இந்தியா வரும் ரியல்மி நார்சோ 20 சீரிஸ்
Byமாலை மலர்15 Sep 2020 7:57 AM GMT (Updated: 15 Sep 2020 10:41 AM GMT)
ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நிறுவனம் நார்சோ 20 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. ரியல்மி நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ மற்றும் நார்சோ 20ஏ என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்பட இருக்கிறது. அறிமுக நிகழ்வு செப்டம்பர் 21 மதியம் 12.30 மணிக்கு துவங்குகிறது. நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் வழங்கப்பட இருக்கிறது.
புதிய டீசர்களின் படி மூன்று மாடல்களில் ஒன்று மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது, மற்ற இரு மாடல்களில் மாடல்களில் நான்கு கேமரா சென்சார்கள் செங்குத்தாகவும், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது. இத்துடன் இரு மாடல்களின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இதன் ப்ரோ மாடலில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய போன்களில் மீடியாடெக் சிப்செட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X