என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
விரைவில் துவங்க இருக்கும் புது பிஎஸ்என்எல் சேவை
Byமாலை மலர்27 Aug 2020 5:27 AM GMT (Updated: 27 Aug 2020 5:27 AM GMT)
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக இணையவழி சேவை ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் இணையவழி தொலைகாட்சி சேவை (இண்டர்நெட் ப்ரோடோகால் டெலிவிஷன்-ஐபிடிவி) துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய ஐபிடிவி சேவை முதற்கட்டமாக கேரளா மாநிலத்தில் துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேவை இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு அதன்பின் வணிக ரீதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.
கேரளா மாநிலத்தின் எர்னாகுளம், அலப்பி மற்றும் த்ரிசூர் என மூன்று வட்டாரங்களில் வழங்கப்பட இருக்கிறது. ஐபிடிவி சேவைக்கான முதற்கட்ட சோதனை ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 31 வரை நடைபெற இருக்கிறது.
பிஎஸ்என்எல் ஐபிடிவி சேவைக்கான சோதனையில் கலந்து கொள்ள செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விருப்பம் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு அனைத்து சேனல்களும் இலவசமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X