என் மலர்
தொழில்நுட்பம்

ஜியோனி
இந்திய சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஜியோனி
ஜியோனி நிறுவனத்தின் புதிய ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜியோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில், ஜியோனி மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. ரீ-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோனி தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
ஜியோனி மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துடன் இதன் விலை ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என ஜியோனி அறிவித்து உள்ளது. இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது.

டீசர் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பெரிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.
Next Story






