என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
4ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகும் நோக்கியா ஃபீச்சர் போன்
Byமாலை மலர்15 Aug 2020 10:26 AM GMT (Updated: 15 Aug 2020 10:26 AM GMT)
4ஜி கனெக்டிவிட்டி கொண்ட புதிய நோக்கியா ஃபீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா போன் டிஏ-1316 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது எஃப்சிசி வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் இந்த நோக்கியா போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதில் எல்டிஇ பேண்ட் 5, 7 மற்றும் 38 உள்ளிட்டவற்றுக்கான வசதி, 1150 எம்ஏஹெச் பேட்டரி, 3.7 விடிசி பவர் ரேட்டிங் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சங்களை பொருத்தவரை இது பட்ஜெட் விலையில் ஃபீச்சர் போன் மாடலாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் இது அமெரிக்காவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
புதிய நோக்கியா மொபைலின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார் மற்றும் நோக்கியா பிராண்டிங் கொண்டிருக்கிறது. இதன் வடிவத்தை வைத்தே இது ஃபீச்சர் போன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இதுதவிர விரைவில் நோக்கியா 5.3 மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X