search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் நார்டு
    X
    ஒன்பிளஸ் நார்டு

    ஒன்பிளஸ் நார்டு பாப் அப் விற்பனை தேதி அறிவிப்பு

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான பாப் அப் விற்பனை தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


    இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்குகிறது. எனினும், முன்கூட்டியே ஒன்பிளஸ் நார்டு வாங்க விரும்புவோருக்கு விர்ச்சுவல் பாப் அப் விற்பனை ஜூலை 27 ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. பாப் அப் விற்பனைக்கான முன்பதிவுகள் ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது. 

    முதல் இரண்டு ரவுண்டு விற்பனைகள் ரெட் கேபிள் கிளப் வாடிக்கையாளர்களுக்கு பிரத்கயேமாக நடைபெற இருக்கிறது. மூன்றாவது ரவுண்ட் விற்பனை ஜூலை 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு முன்பதிவுகள் ஏற்கனவே ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

     ஒன்பிளஸ் நார்டு

    அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது. ஒன்பிளஸ் நார்டு பாப் அப் விற்பனை ரவுண்ட்களில் பங்கேற்க ஒன்பிளஸ் வலைதளம் சென்று அவதார் ஒன்றை உருவாக்க வேண்டும். பின் அவதாரை இன்ஸ்டாகிராமில் #NordPopUp எனும் ஹேஷ்டேக் சேர்த்து பகிர வேண்டும். 

    இவ்வாறு செய்தால் பாப் அப் விற்பனைக்கான இன்விடேஷனை வென்றிட முடியும். அவதாரை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும், ஒன்பிளஸ் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து பதிவினை சமர்பிக்க வேண்டும். பாப் அப் விற்பனை நிகழ்வுக்கான இன்விடேஷன் முதல் 100 பேருக்கு கட்டாயம் வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×