என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
குறைந்த விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் மைக்ரோமேக்ஸ்
Byமாலை மலர்19 Jun 2020 10:44 AM GMT (Updated: 19 Jun 2020 10:44 AM GMT)
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் விரைவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும் என்றும் இது பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மைக்ரோமேக்ஸ் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மைக்ரோமேக்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என்றும் இவை ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
'நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம், விரைவில் மிகப்பெரிய சாதனத்தை வெளியிடுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள்' என மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X