என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா ஆலை மூடல்
Byமாலை மலர்27 May 2020 8:39 AM GMT (Updated: 27 May 2020 8:39 AM GMT)
ஆலையில் பணியாற்றியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை மீண்டும் மூடப்பட்டது.
தமிழ்நாட்டில் இயங்கி வந்த நோக்கியா உற்பத்தி ஆலை ஊழியர்களில் சிலருக்கு கொரோனா வைரல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்பட்டது.
நோக்கியா சார்பில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்ற விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து வெளியான தகவல்களில் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் மொத்தம் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட ஆலையில் பணிகளின் போது சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட்டதாகவும், ஆலையில் உள்ள உணவகங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக நோக்கியா ஆலை பணிகள் படிப்படியாக துவங்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு சார்பில் விதிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி ஆலை பணிகள் துவங்கி நடைபெற்று வந்ததாக நோக்கியா தெரிவித்துள்ளது.
முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போவும், தனது ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆலையை மூடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X