என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரிலையன்ஸ் ஜியோ வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் அதிரடி மாற்றம்
Byமாலை மலர்16 May 2020 12:11 PM GMT (Updated: 16 May 2020 12:11 PM GMT)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிவித்து வழங்கி வரும் வொர்க் ஃபிரம் ஹோம் சலுகையில் அதிரடி மாற்றத்தை செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வொர்க் ஃபிரம் ஹோம் ஆட் ஆன் சலுகையின் வேலிடிட்டியை 30 நாட்களாக மாற்றியுள்ளது. கடந்த வார அறிவிப்பின் படி இவற்றுக்கான வேலிடிட்டி குறிப்பிட்ட ஜியோ எண் பேஸ் பிளான் நிறைவுறும் வரை வழங்கப்படும் என கூறப்பட்டது.
எனினும், பேஸ் பிளான் சார்ந்த வேலிடிட்டியை மாற்றி ஆட் ஆன் சலுகைக்கான வேலிடிட்டியை 30 நாட்களாக ரிலையன்ஸ் ஜியோ மாற்றியுள்ளது. முன்னதாக ரூ. 151, ரூ. 201 மற்றும் ரூ. 251 விலையில் ஆட் ஆன் பேக்குகளை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு முறையே 30 ஜிபி, 40 ஜிபி மற்றும் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரூ. 11, ரூ. 21, ரூ. 51 மற்றும் ரூ. 101 விலையில் ஆட் ஆன் சலுகைகளை அறிவித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 2399 விலையில் வருடாந்திர பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X